காயீன் ஆபேலை கொன்று ஓடிபோனபின் சேத் என்ற மகனை பெற்றான் ஆதாம்.
ஆதாம் தேவசாயலில் உருவாக்கப்பட்டான். அதாவது தேவனைபோல, தேவ சுபாவபடி.
(ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார். ஆதியாகமம் 5:1)
ஆனால் ஆதாம் பாவம் செய்தபடியால் தேவசாயல் தொடரவில்லை
(ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் (ஆதாமின்) சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான். ஆதியாகமம் 5)
ஆதாமின் சாயல்தான் சேத்துக்கு வந்தது. தேவ சாயல் தொடராமல் மனித சாயல் தொடர ஆரம்பித்தது. சிந்தியுங்கள். அன்று பாவம் நடைபெறவில்லையென்றால் தேவசாயல் தொடர்ந்து நாமும் தேவசாயலில் இருந்திருப்போம்.
ஆனாலும் ஓர்நாளில் மறுபடியும் அவரை போல நம்மை மாற்றுவார். நாம் நித்ய வாழ்வுக்குள் பிரவேசித்தால்
(பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். யோவான் 3:2)
அவரைபோல நாமும் மாறபோகிறோம். இது நற்செய்தி
இதற்கு நாம் அவருடைய பிள்ளைகளாய் தேவனால் பிறந்தவர்களாய் இருக்க வேண்டும் என்பது மட்டுமே.
இந்த நம்பிக்கை கொண்டவர்கள் இந்த பூமியில் வாழும் காலம்வரை தங்களை தாங்களே சுத்திகரித்துகொள்ளுவர்.
(அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான். 1யோவான் 3:3)