பாவத்தினிமித்தம் ஏதேனை விட்டு துரத்தப்பட்ட ஆதாம் ஏவாளுக்கு காயீன் , ஆபேல் என்று பிள்ளைகள் பிறந்தார்கள். மூத்தவனான காயீன் ஒரு விவசாயி. இளைய ஆபேல் ஆடு மேய்ப்பவன்.
இரண்டு பேரும் கடவுளுக்கு காணிக்கை படைத்தனர். ஆனால் ஆண்டவர் ஆபேலின் காணிக்கையை மட்டும் ஏற்று கொண்டார். காயீனுடைய கணிக்கை அங்கிகரிக்க படவில்லை. இதனால் எரிச்சலடைந்த காயீன் தன் தம்பி ஆபேலை கொன்றான். ஆபேலின் ரத்தம் தேவனை நோக்கி முறையிட்டது. ஆண்டவர் காயினை சபித்தார்.
தம்பியின் ரத்தத்தை சிந்திய காயீன் எஞ்சிய காலங்களில் பயந்து பயந்து நிம்மதியற்ற வாழ்வு வாழ்ந்தான்.
ஆண்டவர் ஏன் ஆபேலின் காணிக்கையை மட்டும் அங்கிகரித்தார்?
காரணம் முதலில் ஆபேல் ஆண்டவருடைய அங்கிகரிப்புக்கு தகுயாயிருந்தான். ஆகவே அவனது காணிக்கையும் ஏற்றுகொண்டார். ஆபேல் தன் வாழ்வையே ஆண்டவருக்கு கொடுத்திருந்தான். ஆண்டவர் விரும்பினபடி வாழ்ந்தான். ஆனால் காயீன் அப்படி அல்ல. ஆண்டவர் காயீனை அங்கிகரிக்கும் அளவிலான வாழ்வு வாழவில்லை. ஆகவே அவனை அங்கிகரிக்கவில்லை. காயீனையே அங்கிகரிக்காதபோது அவன் காணிக்கையை எப்படி அங்கிகரிக்க முடியும். இன்றும் நம்மில் அநேகர் காயீனை போல தான் நினைக்கிறோம். நாம்முடைய வாழ்வை அவருக்கு கொடுக்க மாட்டோம். ஆனால் நம்முடைய காணிக்கையை மட்டும் அங்கிகரிக்க வேண்டுமென நினைக்கிறோம். நடக்காது.
ஆண்டவருக்கு தேவை மனிதனேயன்றி அவனுடைய பொருள் அல்ல.
காரணம்
(பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது. சங் 24 :1 )
நான் பசியாயிருந்தால் எனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே. நான் எருதுகளின் மாம்சம் புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ? சங்கீதம் 50:12-13)
( இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம், தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது, நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வுநாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன். ஏசா 1 :13)
ஆண்டவர் முதலாவது ஆபேலை ஏற்று கொள்ளும்படி என்ன செய்யதான். தேவனை விசுவாசித்து காணிக்கை கொடுத்தான். ஆபேல் காயினை விடவும் உயர்வான காணிக்கை கொடுக்க காரணமே அவன் தேவனை முழுமையாக விசுவாசித்தான்.
(விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்து தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான். எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:4)
தேவனை விசுவாசிப்பது என்பது தேவன் தான் எல்லாம், அவர்தான் என் வாழ்வின் முதலானவர் என்று நம்பி அவர் சொல்வதை அப்படியே செய்வதாகும். அது ஆபேலின் செயலில் வெளிப்பட்டது.
(விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.எபிரெயருக்கு எழுதின நிருபம் 11:6)
ஆபேல் இந்தவிதமாய் தேவனை விசுவாசித்து காயினை போல கடமைக்கு காணிக்கை கொடாமல் முதலீற்றையும் கொழுமையுமானதையும் கொடுத்தான்.
தேவனை சரியாக விசுவாசித்த ஆபேலிடம் காயின் மேல் பொறாமை இல்லை. மாறாக தேவனை சரியாக விசுவாசியாத காயீனிடமோ எரிச்சல் உள்ளிட்ட துர்குணங்கள் இருந்தது. அது அவனை கொலைகாரனாக மாற்றியது.
தேவனை விசுவாசித்து வாழும் வாழ்வு வாழ்ந்த ஆபேலை தேவன் அங்கீகரித்திருந்தார். காணிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது
சிலர் காயீனை போல சம்பிரதாயமான, சடங்காச்சாரமான, தவறான வாழ்க்கை வாழ்ந்து ஆண்டவருக்கு அதிக காணிக்கை கொடுத்து தவறை சரிபடுத்தலாம் என எண்ணலாம். நிச்சயம் நடக்காது. அவருக்கு தங்களை முதலாவது கொடுக்க வேண்டும்
இன்று இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிக்கப்பட்டவர்கள் இனி வாழ்வது நானல்ல இயேசுவே என்னில் வாழ்கிறார் என்ற மனநிலையில் வாழ்வதால் அந்த விசுவாச அடிப்படையில் மனப்பூர்வமாக உற்சாகமாக தேவையானவர்களுக்கு செய்யும் தர்மசகாய உதவிகள் தேவனால் அங்கீகாரம் பெறும்.
ஆனால் கடவுளுக்கு கொடுத்தால் எனக்கு பல மடங்காக திருப்பி கொடுப்பார் இன்னும் பெரிய பணக்காரனாகலாம் என்ற சுயநல நோக்கோடு காணிக்கை பணங்களை பணக்கார பாஸ்டர்களுக்கோ புண்ணியத்தலங்களுக்கோ கொடுப்போர் தேவனால் அங்கீகரிக்கப்படுவதில்லை